Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நேற்று சரிந்த பங்குச்சந்தை இன்று ஏற்றம்.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

Advertiesment
பங்குச்சந்தை

Siva

, புதன், 29 அக்டோபர் 2025 (10:38 IST)
இந்திய பங்குச்சந்தை நேற்று வாரத்தின் முதல் நாளிலேயே சரிந்த நிலையில், இன்று இரண்டாவது நாளில் ஏற்றம் கண்டிருப்பது முதலீட்டாளர்களுக்கு நிம்மதியையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
 
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 335 புள்ளிகள் உயர்ந்து 84,965 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 118 புள்ளிகள் உயர்ந்து 26,055 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
 
இன்றைய பங்குச்சந்தையில் ஆசியன் பெயிண்ட், பாரதி ஏர்டெல், சிப்லா, எச்.சி.எல். டெக்னாலஜிஸ், ஹெச்.டி.எஃப்.சி. வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, ஐ.டி.சி., ஸ்டேட் வங்கி, சன் பார்மா, டாடா ஸ்டீல், டி.சி.எஸ். உள்ளிட்ட பங்குகளின் விலை உயர்ந்துள்ளது.
 
அதேபோல், ஆக்ஸிஸ் வங்கி, அப்பலோ ஹாஸ்பிடல்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், டாக்டர் ரெட்டி, ஹிந்துஸ்தான் யூனிலீவர், இண்டிகோ, கோடக் மஹேந்திரா வங்கி, ஸ்ரீராம் ஃபைனான்ஸ் உள்ளிட்ட பங்குகளின் விலை குறைந்து வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தந்தைக்காக பழிவாங்க திட்டமிட்ட கல்லூரி மாணவி.. ஆசிட் வீசியதாக பொய் புகார்.. அதன்பின் நடந்த அதிர்ச்சி..!