வாரத்தின் முதல் நாளே பங்குச்சந்தை ஏற்றம்.. இன்றைய சென்செக்ஸ், நிஃப்டி நிலவரம்..!

Siva
திங்கள், 6 அக்டோபர் 2025 (11:24 IST)
இந்திய பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில், இன்று வாரத்தின் முதல் நாளில் பங்குச்சந்தை ஏற்றம் கண்டிருப்பது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 375 புள்ளிகள் உயர்ந்து 81,554 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. அதேபோல், தேசியப் பங்குச் சந்தை நிஃப்டி 108 புள்ளிகள் உயர்ந்து 25,002 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது.
 
இன்றைய பங்குச்சந்தையில் அப்போலோ ஹாஸ்பிடல், ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், பாரதி ஏர்டெல், ஹெச்.டி.எஃப்.சி வங்கி, ஹெச்.சி.எல். டெக்னாலஜிஸ், இன்ஃபோசிஸ், ஜியோ ஃபைனான்ஸ், கோடக் மஹிந்திரா வங்கி, மாருதி, சன் பார்மா, டி.சி.எஸ்., டெக் மஹிந்திரா உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளன.
 
அதே நேரத்தில், ஆசியன் பெயிண்ட்ஸ், சிப்லா, டாக்டர் ரெட்டி, ஹிந்துஸ்தான் லீவர், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, இண்டிகோ, ஐ.டி.சி., ஸ்டேட் வங்கி, டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல் உள்ளிட்ட பங்குகள் குறைந்து வர்த்தகம் ஆகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈபிஎஸ்ஸின் 'எழுச்சிப் பயணம்' மீண்டும் தொடக்கம்: தேதி, இடத்தை அறிவித்த அதிமுக..!

ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு: திடீரென ஏற்பட்ட விபரீத நிகழ்வு என்ன?

குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்.. எம்ஜிஆர் பஞ்ச் டயலாக்கை பேசிய விஜய்..!

4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments