Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

3 நாள் ஏற்றத்திற்கு பின் திடீரென மீண்டும் சரிந்த பங்குச்சந்தை.. சென்செக்ஸ் நிலவரம்..!

Advertiesment
பங்குச்சந்தை

Siva

, வியாழன், 12 ஜூன் 2025 (11:23 IST)
கடந்த மூன்று நாட்களாகப் பங்குச்சந்தை உயர்ந்து கொண்டே வந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்த நிலையில், இன்று திடீரென மீண்டும் பங்குச்சந்தை சரிந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் இன்று 260 புள்ளிகள் சரிந்து 82,310 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதே போல், தேசிய பங்குச்சந்தையின் நிஃப்டி 75 புள்ளிகள் சரிந்து 25,066 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
 
இன்றைய பங்குச்சந்தையில் அப்போலோ ஹாஸ்பிடல், பஜாஜ் ஃபைனான்ஸ், பாரதி ஏர்டெல், சிப்லா, சன் பார்மா, டெக் மஹிந்திரா உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளன.
 
அதேபோல், டைட்டன், டிசிஎஸ், டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், ஸ்டேட் பேங்க், மாருதி, கோடக் மஹிந்திரா வங்கி, ஐடிசி, இன்ஃபோசிஸ், இண்டஸ்இண்ட் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஹிந்துஸ்தான் லீவர், ஹெச்.சி.எல். டெக்னாலஜிஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி உள்ளிட்ட பங்குகளின் விலைகள் குறைந்து வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிந்து நதிநீர் நிறுத்தம்! விவசாயம் வீழ்ச்சி.. பஞ்சத்தில் விழுந்த பாகிஸ்தான்? இனியாவது திருந்துமா?