Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தங்கம் விலை 176 ரூபாய் உயர்வு – மக்கள் அதிருப்தி !

தங்கம் விலை 176 ரூபாய் உயர்வு – மக்கள் அதிருப்தி !
, வெள்ளி, 26 ஏப்ரல் 2019 (09:36 IST)
தங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் பவுனுக்கு 176 ரூபாய் உயர்ந்துள்ளது. அட்சய திருதியை முன்னிட்டு மேலும் உயர வாய்ப்பிருப்பதாக வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தங்கம் உற்பத்தியில் முன்னிலையில் இல்லாவிட்டாலும் தங்கத்தை நுகர்வதில் உலகில் 2வது பெரிய நாடாக இந்தியா இருந்து வருகிறது. அத்தகைய இந்தியாவில் 2018-ம் ஆண்டு குறைந்துள்ள தங்க இறக்குமதியும, அதிகரித்து வரும் விலையும் அதிர்ச்சியை அளித்துள்ளன. இதனால் இந்தியர்களுக்கு தங்கத்தின் மீதான மோகம் குறைந்துள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆனாலும் தொடர்ந்து தங்கத்தின் விலை அதிகரித்துக்கொண்டே வருகிறது. கடந்த சில வாரங்களாக இறங்கு முகத்தில் இருந்த தங்கத்தின் விலை இப்போது மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. நேற்று மட்டும் சென்னையில் ஒரே நாளில் பவுனுக்கு 176 ரூபாய் உயர்ந்து 24,366 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

இன்னும் சில நாள்களில் அட்சயதிருதியை வர இருப்பதால் மக்கள் தங்கம் வாங்க ஆவலாக உள்ளனர். இதனால் தங்கத்தின் விலை மேலும் உயரலாம் என வல்லுனர்கள் தெரிவித்து உள்ளனர். இதனால் தங்கம் வாங்கும் ஆசையில் உள்ள ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மோடி ஹெலிகாப்டரை சோதனை செய்த அதிகாரியின் சஸ்பெண்ட் ரத்து!