Publish Date: Tue, 09 Apr 2019 (16:59 IST)
Updated Date: Tue, 09 Apr 2019 (17:01 IST)
தமிழகத்தில் உள்ள 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடக்கு என்றும் மே 23 ஆம் தேதி தேர்தல் எண்ணிக்கை நடக்கும் என்று தேர்தல் ஆணையம் தற்போது அறிவித்துள்ளது. அனைத்து தரப்பினரின் கோரிக்கையை ஏற்று இந்தத் தேர்தலை நடத்தவுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுபற்றி தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதாவது :
தமிழகத்தில் காலியாக உள்ள 4 தொகுதிகளுக்கு மே 19 ல் இடைத்தேர்தல் நடைபெறும்
சூலூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ் மறைவை அடுத்து அத்தொகுதி காலியாக இருந்தது.மேலும் ஒட்டபிடாரம், திருப்பரங்குன்றம் அரவக்குறிச்சி ஆகிய நான்கு தொகுதிகள் காலியாக இருந்தது.
இது குறித்த வழக்கு நிலுவையால் இருந்த நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்ட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடக்கு என்றும் மே 23 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தற்போது அறிவித்துள்ளது.
ஏப்ரல் 22 ஆம் ஆண்டு வேட்புமனுதாக்கல் தொடக்கம், வேட்புமனுதாக்கல் கடைசிநாள் 29 ஆம் தேதி என்றும் மே 2 வேட்புமனுக்களை திருப்பப்பெற அவகாசம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
webdunia
Publish Date: Tue, 09 Apr 2019 (16:59 IST)
Updated Date: Tue, 09 Apr 2019 (17:01 IST)