Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆரம்பத்திலேயே எண்ட் கார்டா!!! தேர்தல் பிரச்சாரத்தில் நடந்த அபசகுணம்: பொன்னார் கடும் அப்செட்!!

Webdunia
ஞாயிறு, 24 மார்ச் 2019 (08:57 IST)
பாஜக தேர்தல் பிரச்சார வாகனம் பறிமுதல் செய்யப்பட்டதால் பாஜகவினர் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.
 
தமிழகத்தில் திமுக தலைமையில் காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, மதிமுக, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளும் அதிமுக தலைமையில் பாமக, பாஜக, மற்றும் தேமுதிக ஆகியக் கட்சிகளும் கூட்டணி அமைத்துள்ளன. தேர்தல் நெருங்குவதால் திமுக, அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். வேட்பாளர்கள் அறிமுக நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது.
 
இந்நிலையில் பாஜக சார்பில் கன்னியாகுமரியில் போட்டியிடும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று கன்னியாகுமரியில் தனது பிரச்சாரத்தை தொடங்கவிருக்கிறார். இதற்கிடையே சென்னையில் இருந்து கொண்டு செல்லப்பட்ட தேர்தல் பிரசாரத்திற்கான வாகனம் உரிய ஆவணம் இல்லாததால் பறக்கும் படை அதிகாரிகள் வண்டியை சீஸ் செய்து வட்டாட்சியர் அலுவலகரிடம் ஒப்படைத்தனர். இதனால் பொன்னாரும் பாஜகவினரும் கடும் அதிர்ச்சியும் அதிருப்திக்கும் ஆளாகியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments