Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக காங்கிரஸ் இடையே இறுதி ஒப்பந்தம்.! 13 ஆம் தேதி கையெழுத்தாக வாய்ப்பு.!!

Senthil Velan
வெள்ளி, 2 பிப்ரவரி 2024 (11:46 IST)
திமுக காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்த  காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வருகிற 13-ஆம் தேதி சென்னை வருகிறார். அன்றைய தினம் தொகுதி பங்கீடு தொடர்பான இறுதி ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளது.
 
நாடாளுமன்ற மக்களவைக்கு வருகிற ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி கூட்டணி பேச்சு வார்த்தை, தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையிலும் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
 
அதன்படி தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து திமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. காங்கிரஸ் கட்சியுடன், திமுக ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், நாளை கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது. தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகளுடனும் திமுக பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.

ALSO READ: ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்திற்கு ஏன் செல்லவில்லை?. ஹேமந்த் சோரன் மனுவை விசாரிக்க உச்சநீதிமன்ற மறுப்பு.!!

இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க வரும் 13ம் தேதி  காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சென்னை வருகிறார். அன்றைய தினம் மக்களவை தேர்தலில் திமுக - காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீடு தொடர்பான இறுதி ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை அருகே வந்த பாகிஸ்தான் படகு திடீர் மாயம்.. ஹெலிகாப்டரில் தேடுதல் வேட்டை..!

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்.. முதல்வர் மனைவி துர்கா பங்கேற்பு..!

தேர்தலுக்கு பின் அதிமுகவுடன் கூட்டணி.. மாஸ் திட்டம் போடும் தவெக தலைவர் விஜய்..!

குழந்தை வரம் வேண்டி வந்த பெண்.. டாய்லெட் தண்ணீரை குடிக்க வைக்க மந்திரவாதி.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காக செலவிடவில்லை.. திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments