Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டம்மியான சுதீஷ்; ஆக்‌ஷன் எடுப்பாரா ஈபிஎஸ்? அப்செட்டில் பிரேமலதா!

Webdunia
வியாழன், 11 ஏப்ரல் 2019 (12:15 IST)
அதிமுக கூட்டணியில் போராடி இணைந்த விஜயகாந்தின் தேமுதிகவிற்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. ஒதுக்கப்பட்ட நான்கு தொகுதிகளில் கள்ளக்குறிச்சியில் விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷ் போட்டியிடுகிறார். 
 
விஜயகாந்த் பிரச்சரத்தில் ஈடுப்படவில்லை, ஆனால், பிரேமலதா ரெஸ்ட் இல்லாமல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அதிமுகவின் அருமைகளையும், பாஜகவின் பெருமைகளையும், இடையில் தேமுதிகவின் சிறப்புகளையும் பிரச்சாரத்தில் தெளித்து விடுகிறார். 
 
என்னத்தான் பிரச்சாரத்தில் பந்தாவாக பேசினாலும், தனது தம்பி டம்மி ஆக்கப்பட்டுவிட்டானோ என அப்செட்டில் உள்ளாராம் பிரேமலதா. ஆம், தர்மபுரி மாவட்டத்தில் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. 
அதனால், இங்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள், வெற்றிக்காக கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி உடபட சேலம் மாவட்ட ஆத்தூர், ஏற்காடு, கெங்கவல்லி ஆகிய அதிமுகவினர் படையெடுத்து பிராச்சாரத்தில் ஈடுப்பட்டுள்ளனர். 
 
இதனால், தேமுதிக வேட்பாளர் சுதீஷ் பிரச்சாரத்தில் மந்த நிலை நிலவுகிறதாம். இதனால், நேற்று எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்த போது இது குறித்து பிரேமலதா புகாராக அவர் காதில் ஓதியுள்ளார். 
 
இதை கேட்டுக்கொண்ட எடப்பாடி பழனிச்சாமியும், தேர்தல் பணியை தோய்வின்றி மேற்கொள்வதோடு, வெற்றிக்கு தேவையான அனைத்தும் செய்யப்படும் என உறுதி அளித்துள்ளாராம். 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments