Publish Date: Thu, 21 Sep 2017 (14:02 IST)
Updated Date: Thu, 21 Sep 2017 (14:05 IST)
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான (டிராய்) ஒரு புது அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு வாய்ஸ் கால் கட்டணங்கள் குறித்ததாகும்.
ஒரு நெட்வொர்க்கில் இருந்து வெவ்வேறு நெட்வோர்க் கால் அழைப்புகளுக்கு இதுவரை 14 பைசா வசூலிக்கப்பட்டது. இந்த கட்டணம் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் குறைக்கப்படவுள்ளது.
முதலில் 8 பைசா குறைத்து தற்போது 6 பைசா என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக டிராய் அறிவித்துள்ளது. அதன்படி அக்டோபர் 1 முதல் ஒரு நெட்வோர்க்கில் இருந்து மற்றோரு நெட்வோர்க்கு வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் அழைப்புகளுக்கு 6 பைசா மட்டும் செலவாகும்.
டிராயின் இந்த முடிவால் வாடிக்கையாளர்கள் மட்டுமின்றி ஜியோ நிறுவனமும் அதிக லாபத்தை பெரும் என தெரிகிறது. ஆனால், ஏர்டெல், ஐடியா, வோடபோன் போன்ற போட்டி நிறுவனங்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
Sugapriya Prakash
Publish Date: Thu, 21 Sep 2017 (14:02 IST)
Updated Date: Thu, 21 Sep 2017 (14:05 IST)