Publish Date: Mon, 18 Dec 2023 (19:47 IST)
Updated Date: Mon, 18 Dec 2023 (19:49 IST)
ஒவ்வொரு மாதமும் பவுர்ணமியன்று தேவியை தியானம் செய்து வழிபட்டு லலிதா சகஸ்ரநாமம் சொல்வதால் நோய்கள் நீங்கும். அனைத்துவித உபாதைகள் விலகும் என நம்பப்படுகிறது.
லலிதா சகஸ்ரநாமம் சொல்வதால் பூர்வ ஜென்ம புண்ணியத்தால் கடைசி பிறவியாக இப்பிறவி அமையும் என்றும், அனைத்து கடவுளையும் வழிபட்ட புண்ணியம் நமக்கு கிடைக்கும் என்றும் இதன் பொருள் அறிந்து பாராயணம் செய்தால் தானாகவே எல்லாம் வந்து சேரும் என்றும் கூறப்படுகிறது
மேலும் எதிரிகளை பேச முடியாது செய்து விடும் சக்தி இதற்கு உண்டு என்றும் நாவில் சரஸ்வதி தேவி நர்த்தனம் ஆடும் என்றும் கூறப்படுகிறது. மேலும் பேய் பிசாசுகள் உபாதைகள் விலகும் என்றும் எந்த வித துன்பமும் நம்மை அண்டாது என்றும் நம்பப்படுகிறது