Publish Date: Wed, 13 Dec 2023 (19:01 IST)
Updated Date: Wed, 13 Dec 2023 (19:03 IST)
திருமாலுக்கு இணையானவர் சக்கரத்தாழ்வார் என்றும் அவரை வணங்கினால் கோடி பலன் உண்டு என்றும் ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர்.
திருமாலின் வலது கையை அலங்கரிக்கும் சக்கர ஆயுதமே சக்கரத்தாழ்வார் என்பதும் திருமால் கோவில்களில் சக்கரத்தாழ்வாருக்கு தனி சன்னதி உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் திருமாலுக்கு இணையானவர் என்று வேதாந்த தேசிகர் கூறியுள்ளார். திருமால் கோவில்களில் சக்கரத்தாழ்வாருக்கு தனி சன்னதி உண்டு என்றும் 16 மற்றும் 32 கைகளை உடையவராக இவர் இருப்பார் என்றும் கூறப்படுகிறது.
இந்த சக்கரத்தாழ்வாரை வணங்கி வழிபட்டால் கோடி நன்மைகள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.