Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

புரட்டாசி பௌர்ணமி: விரதமிருந்து சிவனை வழிபாடு செய்தால் பலன் என்ன?

Advertiesment
புரட்டாசி பௌர்ணமி

Mahendran

, வெள்ளி, 26 செப்டம்பர் 2025 (18:30 IST)
ஐப்பசி மாதப் பௌர்ணமி மட்டுமல்லாமல், சித்திரை மாதம் முதல் அனைத்து மாதங்களிலும் வரும் பௌர்ணமி தினத்தில் சிவபெருமானை வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது. அந்த வகையில், புரட்டாசி பௌர்ணமி அன்று வீட்டில் விரதமிருந்து சிவனை வழிபடுவதும், அருகிலுள்ள சிவாலயங்களுக்கு சென்று வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து, நெய் தீபங்கள் ஏற்றி வழிபடுவதும் பல விசேஷ பலன்களைத் தரும்.
 
புரட்டாசி பௌர்ணமி தினத்தை 'பாகுளி' என்றும் அழைப்பார்கள். இந்த நாளில் சிவனை வழிபட்டால், துன்பங்கள் நம்மை நெருங்காது.
 
புரட்டாசி பௌர்ணமி அன்று காலையில் சிவ வழிபாடு செய்தால், முற்பிறவிகளில் செய்த பாவங்கள் மட்டுமின்றி, இந்தப் பிறவியில் செய்த பாவங்களும் நீங்கும்.
 
மாலை வேளையில் வரும் பிரதோஷ நேரத்தில் சிவபெருமானை வழிபட்டால், ஏழு பிறவிகளில் நாம் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்குவதுடன், நாம் விரும்பிய அனைத்து வேண்டுதல்களும் நிறைவேறும் என்று நம்பப்படுகிறது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்த ராசிக்காரர்களுக்கு மனோ தைரியம் உண்டாகும்! - இன்றைய ராசி பலன்கள் (26.09.2025)!