Publish Date: Wed, 02 Jul 2025 (22:00 IST)
Updated Date: Wed, 02 Jul 2025 (22:02 IST)
நாம் ஒவ்வொரு மாதமும் வரும் பிரதோஷ நாட்களில் சிவபெருமானுக்கு நிவேதனம் செய்து தானம் வழங்குவதன் மூலம் பல்வேறு பலன்களை பெற முடியும். எந்த மாதத்தில் என்ன நிவேதனம், அதனால் கிடைக்கும் பலன்கள் என்ன என்பதைப் பார்ப்போம்.
சித்திரை: சர்க்கரைப் பொங்கலையும், புளியோதரையும் நிவேதனம் செய்து தானம் வழங்க வேண்டும். இதன் பலன், பெண்களுக்கு ஏற்படும் கர்ப்ப சம்பந்தமான நோய்கள் நீங்கு
வைகாசி : பாலையும், சர்க்கரைப் பொங்கலையும் இறைவனுக்கு நிவேதித்துப் பின் தானம் செய்ய வேண்டும். இதன் பலன், வயிறு சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் நம்மைவிட்டு அகன்றுவிடும்.
ஆனி : தேனும் திணைமாவும் கொண்டு ஈசனார்க்கு நிவேதனம் செய்யப்பட வேண்டும். இதன் பலன், மலட்டுத்தன்மை நீங்கும்.
ஆடி மாத பிரதோஷ நாட்களில், வெண்ணெயுடன் சர்க்கரை சேர்த்து இறைவனுக்கு நிவேதனம் செய்து, அதனைப் பிறகு தானம் செய்ய வேண்டும். இதன் மூலம், கொழுப்பு சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்கும்.
ஆவணி: இந்த மாதப் பிரதோஷங்களில் தயிர் சாதத்தை இறைவனுக்கு நிவேதனம் செய்து தானம் செய்தால், காரியத் தடைகள் நீங்கும். நோய்வாய்ப்பட்டவர்கள் அதிலிருந்து மீண்டு சுகம் பெறுவார்கள்.
புரட்டாசி: சர்க்கரைப் பொங்கலையும், புளியோதரையும் நிவேதனம் செய்து தானம் வழங்க வேண்டும். இதன் பலனாக, அரிப்பு, தடிப்பு, ஊரல், விஷக்கடி போன்ற தோல் சம்பந்தப்பட்ட தொல்லைகள் நீங்கும்.
ஐப்பசி: உளுந்து வடையும், இனிப்புப் பண்டமும் இறைவனுக்கு நிவேதனம் செய்து தானம் செய்ய வேண்டும். இதனால், சீதள நோய்கள் (சளி, காய்ச்சல் போன்ற குளிர்ச்சியால் வரும் நோய்கள்) விலகும்.
கார்த்திகை: எலுமிச்சை சாதமும், தேங்காய் சாதமும் இறைவனுக்கு நிவேதனம் செய்து தானம் செய்ய வேண்டும். இதன் பலன், பெண்களுக்கு ஏற்படும் கர்ப்ப சம்பந்தமான நோய்கள் நீங்குவதுடன், அடிவயிற்றில் இருந்து தொடைப் பகுதி வரையிலான நோய்களும் நீங்கும்.
மார்கழி: வெண் பொங்கலும், கடலை சுண்டலும் இறைவனுக்கு நிவேதனம் செய்து தானம் செய்யப்பட வேண்டும். இதன் மூலம், மஞ்சள்காமாலை, ஆஸ்துமா போன்ற சுவாசம் தொடர்பான நோய்கள் விலகும்.
தை: தயிர் ஏட்டில் தேன் கலந்து இறைவனுக்கு நிவேதனம் செய்து தானம் அளிக்க வேண்டும். இதனால், கபத்தால் வரும் வியாதிகள் (சளி, இருமல் போன்றவை) நீங்கும்.
மாசி: நெய்யுடன் கலந்து நிவேதனம் செய்து தானம் செய்ய வேண்டும். இதன் மூலம், மாந்தம், வயிறு உப்புசம், சிறுநீரகக் கோளாறுகள் ஆகியவை தீரும்.
பங்குனி: தேங்காய்ச் சாதமும், தக்காளிச் சாதமும் இறைவனுக்கு நிவேதனம் செய்து தானம் செய்ய வேண்டும். இதன் பலனாக, பித்தம், பைத்தியம் போன்ற மன மற்றும் உடல் ரீதியான கோளாறுகள் நீங்கும்.