Publish Date: Fri, 27 Jan 2023 (19:30 IST)
Updated Date: Fri, 27 Jan 2023 (19:31 IST)
பழனி முருகன் கோவிலில் இன்று குடமுழுக்கு விழா நடைபெற்றதை அடுத்து இன்று மாலை திருக்கல்யாணம் நடைபெற இருப்பதால் பக்தர்கள் பரவசம் ஆகியுள்ளனர்.
பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழாக்கான கொடியேற்றம் வரும் 29ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் நாளை பழனி மலைக்கோவிலில் சண்முகர் வள்ளி தெய்வயானை திருக்கல்யாணம் நடைபெற உள்ளது
இதை அடுத்து பக்தர்கள் ஏராளமானோர் இந்த திருக்கல்யாணத்தை பார்க்க குவிந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் தைப்பூச திருவிழாவுக்கு ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரை மூலம் பழனியை நோக்கி வந்து கொண்டிருப்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது