Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சருமத்தில் பருக்கள் வருவதற்கான முக்கிய காரணங்கள் என்ன..?

சருமத்தில் பருக்கள் வருவதற்கான முக்கிய காரணங்கள் என்ன..?
நாம் சருமத்திற்கு தரும் தொந்தரவுகளால் தான் முகப்பரு வருகிறது. என்னென்ன தவறுகள் செய்கிறோம் என்பதை பார்ப்போம். பெரும்பாலும் நாம் வெயிலில் சென்றுவிட்டு இரவு தூங்கும்போது முகத்தில் உள்ள மேக்கப்பை அகற்றாமல் தூங்கினால் சருமத்தில் அழுக்குகள் தேங்கி முகப்பருக்களை உண்டாக்கும்.
ஒரு சிலர் அதிகமாக முகத்தை கழுவினால் முகத்தில் ஏற்படும் எண்ணெய் பசையை நீக்கலாம் என்று நினைத்து முகத்தை அடிக்கடி  கழுவினால் எண்ணெய்ப்பசை அதிகரித்து முகப்பரு வரக் காரணமாகிவிடும். மேலும் சருமம் வறட்சியடைய வாய்ப்புள்ளது.
 
தினமும் அழகு கிரீம்களை பயன்படுத்தினால் அதில் உள்ள கெமிக்கல் சருமத் துளைகளில் அடைப்பை ஏற்படுத்தி பருக்களை  உருவாக்கிவிடும்.
webdunia
சருமத்தை அதிகமாக தேய்ப்பதன் மூலம் இறந்த செல்கள் வெளியேற்றப்படும். ஆனால் அளவுக்கு அதிகமாக செய்யும்போது பாக்டீரியாக்கள் வேகமாக பரவி பருக்கள் வர வாய்ப்புண்டு.
 
சிலர் முதுமையால் ஏற்படும் சரும சுருக்கத்தை மறைக்க ஆண்டி-ஏஜிங் பொருள்களை பயன்படுத்துவார்கள். இதனை உபயோகிப்பதாலும்  சருமத்தில் பருக்கள் வரும்.
 
தலைமுடி பராமரிப்புக்கு உபயோகப்படுத்தக் கூடிய ஹேர் டிரையர் மற்றும் சில எலக்ட்ரானிக் பொருள்களில் உள்ள சிலிக்கான் நமது கையில்  படும். இதை நம் முகத்தில் தெரியாமல் வைத்தால் கூட பருக்கள் அதிகமாக வர வாய்ப்பு உண்டு.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காலை உணவைத் தவிர்ப்பதால் என்ன பாதிப்புகள் வருகின்றன தெரியுமா...?