Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தேவையற்ற முடிகளை ஷேவ் செய்வதால் ஏற்படும் விளைவுகள்...!!

தேவையற்ற முடிகளை ஷேவ் செய்வதால் ஏற்படும் விளைவுகள்...!!
கூந்தல் வளர்ச்சியின்மை மனதுக்குத் தொந்தரவானதாக இருக்கிறதோ, அதேபோல் தேவையில்லாத இடங்களில் ரோமங்கள் வளரும்போதும் மிகப்பெரிய தொந்தரவைக் கொடுக்கக் கூடியதாக மாறிவிடுகிறது. 
உடலில் உள்ள தேவையற்ற ரோமங்கள் வெயில் காலத்தில் அதிக வேர்வையால் உடலில் துர்நாற்றம் அதிகரிக்கும். தேவையற்ற முடிகளை ஷேவிங் செய்து கொள்வது க்ரீம் அப்ளை செய்து முடியை நீக்குவது ஆகியவை உடலுக்கு கேடானது என்பது பலருக்கும் தெரிவதில்லை. இப்படி முடியை முழுவதும் நீக்குவதால் தோல் கருத்து சொரசொரப்பாகவும் தடித்துவிடும் வாய்ப்புகள் அதிகம்.
 
முடிகளை நீக்க முறையான வழிகளையே பின்பற்ற வேண்டும். பியூட்டி பார்லர் சென்று வாக்சிங் மூலம் முடிநீக்கம் செய்வதே சிறந்தது. இதனால் நம்முடைய தோல்கள் பளபளப்பாகவும், பொலிவுடனும் காணப்படும். இதுவே சரியான வழிமுறையாகும்.
webdunia
உடலில் வளரும் தேவையற்ற முடியை நீக்க எலுமிச்சை, சர்க்கரை மற்றும் தேன் கலவை சிறந்ததாக இருக்கும். இந்த முறை ஒரு வேக்ஸ் போன்று செயல்படும் மற்றும் இந்த முறையால் சிறிது வலியை உணர நேரிட்டாலும், எந்த ஒரு பக்கவிளைவும் இருக்காது.
 
இயற்கையான முறையில் இது போன்று ய்வதால் உடலில் துர்நாற்றம் அதிகம் ஏற்படாமல் பாதுகாக்கலாம். முடிந்தவரை முடியை முழுவதுமாக ஷேவ் செய்யாமல் ட்ரிம் செய்வதே நல்லது. தோலுக்கும் எந்த பிரச்சனையும் இருக்காது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இயற்கையான முறையில் முகத்தை அழகாக்கும் குறிப்புகள்....!!