Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முகத்தின் பொலிவை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா...?

முகத்தின் பொலிவை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா...?
ஒரே நிமிடத்தில் சருமத்தின் சோர்வைப் போக்கி பொலிவோடு வெளிப்படுத்த வேண்டுமானால், காட்டனில் ரோஸ் வாட்டரை நனைத்து, முகத்தை துடைத்து எடுக்க  வேண்டும்.

முகத்தை கழுவுவதால், சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் அழுக்குகள் மற்றும் மாசுக்களை மட்டும் நீங்குவதில்லை, சருமத்திற்கு புத்துணர்ச்சி கிடைக்கவும் உதவியாக இருக்கும். அதற்கு ஒரு நாளைக்கு 4-5 முறையாவது முகத்தை கழுவுங்கள். 
 
வாரத்திற்கு ஒரு முறை தவறாமல் ஸ்கரப் செய்ய வேண்டும். இதனால் சருமத்தில் தங்கியுள்ள இறந்த செல்களை வெளியேற்றி, சருமம் பொலிவோடு காணப்படும்.  அதற்கு 2 டேபிள் ஸ்பூன் உப்பில், பாதி எலுமிச்சையை பிழிந்து, சிறிது சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து, பின் அதனை முகத்தில் தடவி மசாஜ் செய்து, 2-3 நிமிடம்  ஊறவைத்து, பின் கழுவ வேண்டும். 
 
கண்களைச் சுற்றியுள்ள சோர்வு மற்றும் கருவளையத்தைப் போக்க, தினமும் உருளைக்கிழங்கு அல்லது வெள்ளரிக்காய் துண்டை கண்களில் 5-10 நிமிடம் வைத்து  வந்தால் நல்ல பலன் கிடைக்கும். 
 
சருமத்தில் இருக்கும் சோர்வு நீங்கி, முகம் பொலிவோடு இருக்க வாரத்திற்கு 2-3 முறை ஃபேஸ் மாஸ்க் போட வேண்டும். இந்த ஃபேஸ் மாஸ்க் போட வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே செய்யலாம். 
 
அதற்கு தயிர் அல்லது பால், மஞ்சள் தூள், ரோஸ் வாட்டர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவினால், சருமத்தின் சோர்வு நீங்குவதோடு, சருமத்தின் நிறமும் அதிகரித்து காணப்படும். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பல நோய்கள் வராமல் காக்கும் அற்புத மூலிகை துத்தி கீரை !!