Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வீட்டிலேயே எளிய மற்றும் இயற்கையான முறையில் ஃபேஷியல் செய்ய வேண்டுமா...?

வீட்டிலேயே எளிய மற்றும் இயற்கையான முறையில் ஃபேஷியல் செய்ய வேண்டுமா...?
முகத்தை பொலிவாக்கவும், அழகுபடுத்தவும் விரும்பும் பெண்கள் கண்டிப்பாக செய்துகொள்ள கூடியவற்றில் ஃபேஷியலும் முக்கியமானது. விதவிதமான  பொருள்களை கொண்டு ஃபேஷியல் செய்யப்படுகிறது. அதே போன்று சரும பராமரிப்புக்கேற்பவும் ஃபேஷியல் செய்யப்படுகிறது. 

முகத்தில் சுருக்கள் வராமல் சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை வெளியேற்றி முகத்தை புத்துணர்ச்சியாக வைக்கவே ஃபேஷியல் செய்யப்படுகிறது.
 
சிலர் மாதந்தோறும் பார்லருக்கு சென்று ஸ்கின்னை பராமரித்துக் கொள்வார்கள். ஆனால் சிலருக்கோ அதற்கெல்லாம் நேரம் இருக்காது. அப்படியானவர்கள்  பார்லருக்குப் போகாமல், வீட்டிலேயே ஃபேஷியல் செய்துக் கொள்ளலாம்.
 
சாக்லெட் சருமத்திற்கு மிகவும் நல்லது. சென்சிடிவ் சருமம் உள்ளவர்கள் சாக்லெட் ஃபேஸ் மாஸ்க் போடுவதைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இது சருமத்தை வறட்சியடையச் செய்வதோடு, அரிப்பை ஏற்படுத்தவும் செய்யும்.
 
பரங்கிக்காயில் வைட்டமின்கள் அதிகம் இருப்பதால், இதனைக் கொண்டு ஃபேஸ் மாஸ்க் போட்டால், அது சருமத்திற்கு தேவையான வைட்டமின்களைத் தருவதோடு, சருமத்தின் நிறத்தையும் அதிகரிக்கும். அதற்கு இதனை மசித்து முகத்தில் தடவி ஊறவைத்து கழுவ வேண்டும்.
 
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன், சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன், தேன் - அரை டீஸ்பூன் ஆகியவற்றை கலந்து, முகத்தை ஸ்கிரப் செய்துக் கொள்ளவும். பின்னர் காட்டன் வைத்து முகத்தை துடைக்கவும்.
 
க்ரீன் டீ சருமத்தை மென்மையாக்கவும், தேன் ப்ளீச்சிங் பொருளாகவும் செயல்படுவதால், இவற்றைக் கொண்டு மாஸ்க் போட்டால், சருமத்தின் நிறம் அதிகரிக்கும்.
 
திராட்சை சாற்றில் தேன் சேர்த்து கலந்து, சருமத்திற்கு மாஸ்க் போட்டால், அது சருமத்தில் உள்ள பருக்களால் வந்த தழும்புகளையும், வடுக்களையும் போக்கி, சருமத்தை அழகாக வைத்துக் கொள்ள உதவும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இவ்வளவு மருத்துவ பயன்களை கொண்டதா நந்தியாவட்டை !!