Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கருவளையங்கள் தொல்லையா? இயற்கையான வழியில் முக அழகைப் பாதுகாக்கும் எளிய குறிப்புகள்!

Advertiesment
கருவளையம்

Mahendran

, வியாழன், 24 ஜூலை 2025 (18:59 IST)
தூக்கமின்மை, மன அழுத்தம், ரத்த சோகை, அதிக திரைப்பயன்பாடு, மரபணு போன்ற காரணங்களால் ஏற்படும் கருவளையங்கள், முக அழகை கெடுத்து சோர்வான தோற்றத்தை தரும். இந்த கருவளையங்களை நீக்க சில எளிய இயற்கை வைத்தியங்கள் இதோ:
 
தக்காளி & எலுமிச்சை சாறு: தக்காளிச் சாறுடன் எலுமிச்சை கலந்து தடவி 15 நிமிடம் கழித்து கழுவலாம்.
 
கற்றாழை ஜெல்: கருவளையத்தின் மீது தடவி மசாஜ் செய்து இரவு முழுவதும் விட்டு காலையில் கழுவலாம்.
 
உருளைக்கிழங்கு சாறு: கண்களைச் சுற்றி தடவி உலர விட்டு குளிர்ந்த நீரில் கழுவலாம்.
 
வெள்ளரிக்காய்: துண்டுகளை கண்களின் மேல் 15-20 நிமிடங்கள் வைக்கவும்.
 
காபி தூள் கலவை: காபித் தூளுடன் பாதாம் எண்ணெய், விளக்கெண்ணெய் கலந்து மசாஜ் செய்து காலையில் கழுவலாம்.
 
பாதாம் எண்ணெய்: தினமும் இரவு கருவளையத்தின் மீது தடவி மசாஜ் செய்யலாம்.
 
கிரீன் டீ பைகள்: பயன்படுத்திய பேக்குகளைக் குளிர வைத்து கண்களின் மேல் 10-15 நிமிடங்கள் வைக்கவும்.
 
தேங்காய் எண்ணெய்: பஞ்சில் தொட்டு கண்களுக்குக் கீழ் மசாஜ் செய்து வரலாம்.
 
ரோஸ் வாட்டர்: பஞ்சில் நனைத்து கருவளையம் உள்ள பகுதியில் 15 நிமிடங்கள் வைக்கவும்.
 
சரியான தூக்கம், சீரான உணவுமுறை, மன அழுத்தத்தைக் குறைத்தல் போன்ற ஆரோக்கியமான வாழ்க்கை முறையும் கருவளையங்கள் வராமல் தடுக்க உதவும்.
 
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இரவுப் பணி செய்யும் பெண்களுக்கு ஏற்படும் உடல்நல பாதிப்புகள்!