Publish Date: Sat, 23 May 2020 (08:55 IST)
Updated Date: Sat, 23 May 2020 (09:12 IST)
இந்திய அணி ஆஸ்திரேலியா சென்று விளையாட இருந்த தொடர் நடக்குமா என்பது குறித்து அந்நாட்டு வாரிய அதிகாரி பதிலளித்துள்ளார்.
கொரோனா காரணமாக அனைத்து விதமான விளையாட்டு போட்டுகளும் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் உலகக் கோப்பைக்குப் பின்னர் நடக்க இருந்த தொடரில் இந்திய அணி பங்கேற்பதாக இருந்தது. ஆனால் தற்பொதைய நிலையில் எதுவும் உறுதி இல்லை என்ற நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி கெவின் ராபர்ட்ஸ் அது குறித்து பேசியுள்ளார்.
தனது பேட்டியில் ‘இப்போதைய உலகில் எதையும் உறுதியாக சொல்லமுடியாது. இந்திய கிரிக்கெட் அணி எங்கள் நாட்டுக்கு வந்து டெஸ்ட் தொடரில் விளையாடுவது குறித்து 100 சதவீதம் உத்தரவாதம் அளிக்க முடியாது. ஆனால் 90 சதவீதம் வாய்ப்பு உள்ளது’ எனக் கூறியுள்ளார்.