Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தினேஷ் கார்த்திக் அடுத்த போட்டியில் விளையாடுவாரா?... டிராவிட் அளித்த விளக்கம்!

Webdunia
செவ்வாய், 1 நவம்பர் 2022 (16:11 IST)
வங்கதேசத்துக்கு எதிரான டி 20 போட்டியில் தினேஷ் கார்த்திக் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

உலகக்கோப்பை தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு ஏமாற்றமளித்த வீரராக இந்திய அணியின் தினேஷ் கார்த்திக் உள்ளார்.  இந்த தொடரில் அவர் இதுவரை அவர் விளையாடிய 2 போட்டிகளிலும் அவர் நல்ல ஸ்கோரை செய்யவில்லை. இந்நிலையில் தென் ஆப்பிரிக்க அணிக்கு போட்டியில் அவர் பீல்டிங் செய்த போது பாதியிலேயே முதுகுவலி காரணமாக வெளியேறினார். அதன் பின்னர் ரிஷப் பண்ட் மாற்று விக்கெட் கீப்பராக களமிறங்கினார்.

இந்நிலையில் அடுத்து வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடுவாரா என்ற கேள்விக்கு பயிற்சியாளர் டிராவிட் பதிலளித்துள்ளார். இதுபற்றி பேசிய அவர் “தினேஷ் கார்த்திக் இன்று வலைப்பயிற்சியில் ஈடுபட்டார். அவர் அடுத்த போட்டியில் விளையாடுவாரா என்பது போட்டிக்கு முன்புதான் முடிவு செய்யப்படும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

குவாலிஃபையர் 1: டாஸ் வென்ற ஐதராபாத் எடுத்த அதிரடி முடிவு.. ரன்மழை பொழியுமா?

தோனிக்கு லண்டனில் அறுவை சிகிச்சை.. ஐபிஎல் போட்டிகளில் ஓய்வு அறிவிப்பு??

ஐபிஎல் ப்ளே ஆஃபில் KKR vs SRH… குவாலிஃபையர் போட்டியில் வெற்றி யாருக்கு?

இன்றைய தகுதி சுற்றில் மழை பெய்ய வாய்ப்பு? மழை குறுக்கிட்டால் என்ன நடக்கும்?

நேரடியாக இறுதி சுற்றுக்கு போவது யார்? கொல்கத்தா – ஐதராபாத் அணிகள் இன்று மோதல்!

அடுத்த கட்டுரையில்
Show comments