அர்ஷ்தீப் சிங்குக்கு ஆதரவாக பாகிஸ்தான் முன்னாள் வீரர்!

Webdunia
வெள்ளி, 16 செப்டம்பர் 2022 (09:06 IST)
பாகிஸ்தான் முன்னாள் வீரர் அர்ஷ்தீப் சிங் சமீபகாலமாக சமூகவலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருவது குறித்து வாசிம் அக்ரம் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற இந்தியா பாகிஸ்தான் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்ற நிலையில் இந்திய பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கை சமூக வலைதளத்தில் மதரீதியாக விமர்சனம் செய்யப்பட்டார்.

போட்டியில் ஆசிப் அலியின் கேட்சை முக்கியமான கட்டத்தில் அர்ஷ்தீப் சிங் தவறவிட்டார். இதனால் போட்டியின் முடிவே மாறியது. இதனை அடுத்து ரசிகர்கள் அவர் மீது கடும் கோபம் கொண்டு கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். ஒரு சிலர் அவரை மதரீதியாக டுவிட்டரில் விமர்சனம் செய்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் அவருக்கு ஆதரவாகப் பேசியுள்ளார். அதில் “ அவர் ஒரு இளம்  வீரர். இன்னும் 10 அல்லது 15 ஆண்டுகள் இந்திய அணிக்காக விளையாட உள்ளார். ஆனால் அவரை சொந்த தேச மக்களே விமர்சிப்பது எனக்கு குழப்பமாக உள்ளது” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடைசி ஓவர் வரை சென்ற த்ரில் போட்டி.. 254 இலக்கை நெருங்கிய இங்கிலாந்து.. நூலிழையில் இந்தியா வெற்றி..!

இதுவரை ஜெயித்தது பெரிதில்லை.. இன்னும் 2 போட்டிகளில் ஜெயிக்க வேண்டும்: இந்திய அணியின் பயிற்சியாளர்

அரையிறுதி, இறுதி போட்டின்னாலே தெ.ஆப்பிரிக்காவுக்கு அலர்ஜி.. இன்னொரு தோல்வி..!

அரையிறுதியில் இந்தியாவை வீழ்த்துவது எங்களுக்கு ஸ்பெஷல்.. இங்கிலாந்து கேப்டன் ஹாரி ப்ரூக்..!

தேர்தல் நடைபெறும் தமிழ்நாடு, மேற்குவங்கம், அசாம் மாநிலங்களில் ஐபிஎல் போட்டி இல்லையா? பரபரப்பு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments