இந்திய அணிக்கு நல்ல செய்தி… ஆசியக் கோப்பை தொடருக்குக் கேப்டன் இவர்தானாம்!

vinoth
புதன், 6 ஆகஸ்ட் 2025 (08:22 IST)
ஆசியாவில் கிரிக்கெட் விளையாடும் நாடுகளைக் கொண்டு இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை ஆசியக் கோப்பை தொடரை நடத்தி வருகிறது, ஆசியக் கிரிக்கெட் கவுன்சில், இதன் அடுத்த சீசன் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆறாம் தேதி தொடங்கி பத்தொன்பதாம் தேதி வரை நடக்கவுள்ளது.

இந்த ஆண்டு ஆசியக் கோப்பை தொடர் டி 20 வடிவில் நடக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் அடுத்த ஆண்டு டி 20 உலகக் கோப்பை தொடர் வருகிறது. இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவுள்ள இந்த தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி செப்டம்பர் 14 ஆம் தேதி நடக்கவுள்ளது.

இந்த தொடருக்கான அணியில் இந்திய டி 20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் இடம்பெற மாட்டார் தகவல் வெளியானது. ஏனென்றால் அவர் சமீபத்தில் ‘விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படும் குடலிறக்கத்துக்கான அறுவை சிகிச்சை’ செய்து கொண்டிருந்தார். ஆனால் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி அவர் பூரண குணமடைந்து விட்டதாகவும், அதனால் அவரே இந்த தொடரில் கேப்டனாக செயல்படுவார் என்றும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலகக் கோப்பை அரையிறுதி… வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை ருசித்த இந்தியா பெண்கள் அணி!

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுதி: இந்திய பந்துவீச்சை அடித்து நொறுக்கும் ஆஸ்திரேலிய வீராங்கனைகள்>.!

கொல்கத்தா அணிக்கு செல்கிறாரா ரோஹித் சர்மா.. மும்பை அணியின் நக்கல் பதில்..!

நான் குணமாகி வருகிறேன்… அனைவருக்கும் நன்றி –ஸ்ரேயாஸ் ஐயர் நெகிழ்ச்சி!

டி20 கிரிக்கெட் போட்டி தொடங்குவதற்கு முன் ஆஸ்திரேலிய வீரர் திடீர் மரணம்.. அதிர்ச்சி காரணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments