இந்தியா மற்றும் ஓமன் அணிகள் மோதிய லீக் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸில் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்தது. அதன் படி களமிறங்கிய இந்திய அணியில் அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன், அக்ஸர் படேல் மற்றும் திலக் வர்மா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 188 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 56 ரன்கள் சேர்த்தார்.
அதன் பின்னர் ஆடிய ஓமன் அணி 4 விக்கெட்களை இழந்து 168 ரன்கள் மட்டுமே சேர்த்து தோற்றது. இந்த போட்டியின் தொடக்கத்தின் போது இந்திய அணிக் கேப்டன் சூர்யகுமார் யாதவ் டாஸ் போடும் போது செய்த செயல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
டாச் போட்டுவிட்டு அணியினரின் பெயர்களை சொல்லும் போது ஒரு வீரரின் பெயரை மறந்துவிட்டு “அய்யோ நான் ரோஹித் ஷர்மா போல மறந்துவிட்டேன்” என சிரித்தார். ரோஹித் ஷர்மா பல நேரங்களில் இதுபோல வீரர்களின் பெயரை மறந்துவிட்டு சமாளிப்பார். அதுபோல இப்போது சூர்யகுமாரும் பெயரை மறந்தது ரசிகர்கள் மத்தியில் கேலிகளை உருவாக்கியுள்ளது.