Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நான் குணமாகி வருகிறேன்… அனைவருக்கும் நன்றி –ஸ்ரேயாஸ் ஐயர் நெகிழ்ச்சி!

Advertiesment
Shreyas iyer

vinoth

, வியாழன், 30 அக்டோபர் 2025 (16:10 IST)
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் விளையாடியபோது காயமடைந்த ஸ்ரேயாஸ் ஐயர் சிட்னியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது நெஞ்செலும்பு பகுதியில் அடிபட்டு அதற்கடியில் இருந்த மண்ணீரலில் அடிபட்டி ரத்தக் கசிவு ஏற்பட்டது.

இரத்தக்கசிவு தொடர்ந்து வருவதால் அவசரமாக ஐசியு பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது. இது இந்திய கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர் விரைவில் நலம் பெற பிரார்த்தித்து வருகின்றனர். ஒரு அறுவை சிகிச்சைக்குப் பிறகு முதல் கட்டமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து சாதாரண சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். இதையடுத்து அவரின் ஃபோட்டோ இணையத்தில் வெளியாகி கவனம் பெற்றுள்ளது.

இந்நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் தனக்காகப் பிராத்தித்தவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதில் “நான் இப்போது ஒவ்வொரு நாளும் குணமாகி வருகிறேன். எனக்காகக் கிடைத்து வரும் ஆதரவுக்காக நான் சந்தோஷமடைகிறேன். உங்கள் ஆதரவு எனக்கு மிகவும் முக்கியமானது. உங்கள் நினைவுகளில் என்னை வைத்துக் கொள்வதற்கு நன்றி.” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டி20 கிரிக்கெட் போட்டி தொடங்குவதற்கு முன் ஆஸ்திரேலிய வீரர் திடீர் மரணம்.. அதிர்ச்சி காரணம்..!