தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடர்… ஸ்ரேயாஸ் ஐயர் சந்தேகம்!

vinoth
புதன், 12 நவம்பர் 2025 (08:28 IST)
சமீபத்தில் நடந்த இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் விளையாடியபோது காயமடைந்த ஸ்ரேயாஸ் ஐயர் சிட்னியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது நெஞ்செலும்பு பகுதியில் அடிபட்டு அதற்கடியில் இருந்த மண்ணீரலில் அடிபட்டு ரத்தக் கசிவு ஏற்பட்டது.

இரத்தக்கசிவு தொடர்ந்து இருந்ததால் அவசரமாக ஐசியு பிரிவில் அனுமதிக்கப்பட்டு ஒரு அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். தற்போது ஓய்வில் இருந்து வரும் ஸ்ரேயாஸ் வரும் 30 ஆம் தேதி தொடங்கவுள்ள தென்னாப்பிரிக்கா அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் விளையாடுவது சந்தேகம் என சொல்லப்படுகிறது.

தொடர்ந்து சிறப்பாக விளையாடினாலும் ஸ்ரேயாஸ் காயம் காரணமாக அவ்வப்போது போட்டிகளில் விளையாட முடியாமல் அவதிப்படுகிறார். அது அணியில் அவரின் நிலைத் தன்மையை பாதிப்பதாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வணக்கம் சஞ்சு… டிரேடிங்கை அதிகாரப்பூர்வமாக அறிவித்த சிஎஸ்கே!

32 பந்துகளில் சதம்.. நிறுத்த முடியாத காட்டாற்று வெள்ளமாக வைபவ் சூர்யவன்ஷி!

RCB அணியில் இந்த வீர்ரகள் எல்லாம் விடுவிக்கப்படவுள்ளார்களா?

சி எஸ் கே அணியில் இருந்து இவர்கள் எல்லாம் கழட்டிவிடப்படுகிறார்களா?... பரவும் தகவல்!

பும்ரா புயலில் வீழ்ந்த தென்னாப்பிரிக்கா.. 159 ரன்களுக்கு ஆல் அவுட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments