நடந்து வரும் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பேட்ஸ்மேன்களில் ஒருவராக சாய் சுதர்சன் இருந்து வருகிறார். குஜராத் அணிக்காக ஆடிவரும் அவர் தற்போது அதிக ரன்கள் அடித்த வீரருக்கான ஆரஞ்சு தொப்பியைப் பெற்றுள்ளார்.
ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கியுள்ள நிலையில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சதமடித்து அசத்தியுள்ளார். தற்போதைய டி 20 போட்டிகளில் வீரர்கள் விதவிதமான ஷாட்களைக் கண்டறிந்து விளையாடி வருகிறார்கள். ஆனால் சாய்சுதர்சன் பழைய டெஸ்ட் கால பேட்ஸ்மேன்கள் போன்ற ஒரு மரபான வீரர். மரபான ஷாட்களை மட்டுமே ஆடி ரன்களை சேர்த்து வருவது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது பற்றி பேசியுள்ள முன்னாள் வீரர் சேவாக் “சாய்சுதர்சன் டி 20 போட்டிகளில் கூட டெஸ்ட் போட்டிகள் போல ஷாட்களை ஆடமுடியும் என்றும் அதே நேரத்தில் டி 20 போட்டிகளுக்கான ஸ்ட்ரைக் ரேட்டிலும் தன்னால் விளையாட முடியும் எனக் காட்டியுள்ளார். அவர் இந்திய அணிக்காக மூன்று விதமானப் போட்டிகளிலும் விளையாடத் தகுதியுள்ளவர்” எனக் கூறியுள்ளார்.