Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்த பிட்ச்ல எப்படி பந்துவீசணும்னு பும்ரா காட்டியுள்ளார். சச்சின் புகழாரம்!

இந்த பிட்ச்ல எப்படி பந்துவீசணும்னு பும்ரா காட்டியுள்ளார். சச்சின் புகழாரம்!

vinoth

, வெள்ளி, 5 ஜனவரி 2024 (07:44 IST)
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்துள்ளது. இந்த தொடரில் முதல் போட்டியை இழந்த இந்திய அணி மீண்டெழுந்து இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

இந்த வெற்றி குறித்து இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கர் இந்திய அணியை பாராட்டியுள்ளார். அவரது பதிவில் “இந்த போட்டியில் எய்டன் மார்க்ரம் சிறப்பாக விளையாடினார். இதுபோன்ற ஆடுகளங்களில் அவர் விளையாடுவது போன்று அதிரடியாக விளையாடுவதுதான் மிகச்சிறந்த வழி எனக் கருதுகிறேன்.

இதுபோன்ற ஆடுகளங்களில் எப்படி பந்துவீச வேண்டும் என பும்ரா சொல்லிக் கொடுத்துள்ளார்.” என இந்திய அணியைப் பாராட்டியுள்ளார். மிகவும் தட்டையாக உருவாக்கப்பட்டுள்ள பிட்ச்சால்தான் இரண்டே நாட்களில் டெஸ்ட் போட்டி முடிந்துவிட்டது என கிரிக்கெட் உலகில் இருந்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இனி பும்ராவை எதிர்கொள்ள வேண்டாம் என்பதில் மகிழ்ச்சி… ஓய்வு குறித்து டீன் எல்கர் கருத்து!