Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

9 விக்கெட்டுகளை இழந்த தென்னாப்பிரிக்கா.. இந்தியாவுக்கு இலக்கு எவ்வளவு இருக்கும்?

cricket

Mahendran

, வியாழன், 4 ஜனவரி 2024 (15:22 IST)
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையே இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் நேற்று ஒரே நாளில் 23 விக்கெட்டுகள் விழுந்தன.

 தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்ஸ் முடிந்து  இந்தியா முதல் இன்னிங்ஸ் முடிந்து தென் ஆப்பிரிக்கா அணியின் இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை நேற்று இழந்தது.

இந்த நிலையில் இன்று ஆட்டம் தொடங்கிய நிலையில் தென்னாபிரிக்க அணியின் விக்கெட்டுக்கள் மளமள என விழுந்துள்ளது. குறிப்பாக பும்ரா அபாரமாக பந்து வீசி ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.  முகேஷ் குமார் சற்றுமுன் பிரசித் கிருஷ்ணா தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்,.

இந்த நிலையில் தென் ஆப்பிரிக்கா சற்றுமுன் 9 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் எடுத்துள்ள நிலையில் இந்திய அணியை விட அந்த அணி 73 ரன்கள் அதிகமாக எடுத்து உள்ளது

இன்னும் ஒரு விக்கெட்டுக்கு சில ரன்கள் தாக்குப்பிடித்தாலும் அனேகமாக இந்திய அணிக்கு இலக்கு 100ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது

Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நான் எதை தவறவிட்டேன்… இந்தியா தென்னாப்பிரிக்கா போட்டி குறித்து சச்சின் ஜாலி ட்வீட்!