Publish Date: Thu, 16 Sep 2021 (19:44 IST)
Updated Date: Thu, 16 Sep 2021 (19:49 IST)
உலகில் மிகச்சிறந்த கால்பந்து வீரரானம் கிறிஸ்டியானோ ரொனால்டொ, ஒரு பெண் பணியாளரிடம் மன்னிப்புக் கேட்டு மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளார்.
போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ.
இவர், சமீபத்தில் ஜுவெண்ட்ஸ் அணியில் இருந்து விலகிய மான்ஸ்செஸ்டர் யுனைட்டர் அணியில் இடம்பிடித்தார்.
அந்த அணியில் இணைந்த சில நாட்களில், சர்வதேச கால்பந்துப் போட்டியில் அதிக கோல்கள் (111)அடித்துள்ள ரொனால்டோவின் சாதனை கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்திருக்கிறது.
இந்நிலையில், கால்பந்து பயிற்சியின்போது, தான் அடித்த பந்து பெண் பணியாளர் ஒருவரின் தலையில்பட்டது. உடனே அவரிடம் சென்று கிறிஸ்டியானோ ரொனால்டோ மன்னிப்பு கேட்டதுடன் தனது 7 ஆம் நம்பர் பதித்த ஜெர்சியை அவருக்கு வழங்கியுள்ளார். இதுகுறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.