இந்திய அணியின் கேப்டன் (ஒருநாள் போட்டிகள்) ரோஹித் ஷர்மா டி 20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். தற்போது 38 வயதாகும் ரோஹித் ஒருநாள் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்துகிறார். 2027 ஆம் ஆண்டு நடக்கவுள்ள ஐம்பது ஓவர் உலகக் கோப்பை தொடரில் விளையாடுவதுதான் அவரின் தற்போதைய நோக்கமாக உள்ளது.
ஆனால் அது எந்தளவுக்கு சாத்தியம் என்பது தெரியவில்லை. ஏனென்றால் அப்போது அவருக்கு வயது நாற்பதாக இருக்கும். ரோஹித், கோலி போல உடலை ஃபிட்டாக வைத்திருக்கும் நபரும் அல்ல. இதனால் இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடக்கும் தொடரோடு அவர் ஒருநாள் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் பிசிசிஐ இந்திய வீரர்களின் ஃபிட்னெஸுக்காக நடத்தும் யோ யொ தேர்வுகளில் சில மாற்றங்களை செய்துள்ளது. இந்நிலையில் வரும் 30 ஆம் தேதி தன்னுடைய ஃபிட்னெஸை நிரூபிக்க ரோஹித் ஷர்மா இந்த டெஸ்ட்டில் கலந்துகொள்ள உள்ளார். அவருடன் கே எல் ராகுலும் இந்த டெஸ்ட்டில் கலந்துகொள்ள உள்ளார்.