Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலியைவிட ரோஹித் சர்மா சிறந்த பேட்ஸ்மேன் - பாகிஸ்தான் முன்னாள்

Webdunia
வெள்ளி, 3 பிப்ரவரி 2023 (23:26 IST)
சர்வதேச கிரிக்கெட்டில் கோலியை ரோஹித் சர்மா சிறந்தவர் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணி திறமையாக செயல்பட்டு முன்னணி அணியாகச் செயல்பட்டு வருகிறது.

முன்னாள் கேப்டனாக கோலி இருந்தபோது,  நம்பர் 1 இடத்தில் இருந்த இந்திய அணி, உலகக் கோப்பையில் தோல்வியைச் சந்தித்ததால், கடும் விமர்சனங்கால் கோலி பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து, ரோஹித் சர்மா கேப்டனாகப் பொறுப்பு வகிக்கிறார்.

தற்போது ஒரு நாள் தரவரிசையில் இந்தியா 2 வது இடத்தில் உள்ளது.

இந்த நிலையில், விராட் கோலி மற்றும் ரோஹித்சர்மா பற்றி பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சோஹைல் கூறியுள்ளதாவது:

விராட் கோலி சிறந்த பேட்ஸ்மேன். ஆனால், அவரை விட ரோஹித் சர்மா சிறந்த பேட்ஸ்மேன். கடந்த 12 ஆண்டுகளாக ரோஹித் தான் சர்வதேச கிரிக்கெட்டில் ஜொலிக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.
 

ALSO READ: இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான போட்டியைக் காணும் பிரதமர் மோடி
 
விராட் கோலி ஒரு நாள் கிரிக்கெட்டில் 46 சதங்களும், டெஸ்டில் 27 சதங்களும் அடித்துள்ள நிலையில், மொத்தம் 74 சதங்கள் அடித்துள்ளார், இன்னும் ஒரு நாள் போட்டியில் 4 சதங்கள் அடித்தால் அவர் சச்சின் சாதனையை முறியடித்துவிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சின்னசாமி மைதானத்தில் நடக்கவிருந்த சர்வதேச போட்டிகள் இடமாற்றம்!

RCB அணி முன்பே கோப்பையை வெல்லாததுதான் அசம்பாவிதத்துக்குக் காரணம்… சுனில் கவாஸ்கர் கருத்து!

சி எஸ்கே அணிக்குத் தாவுகிறாரா சஞ்சு சாம்சன்?... சூசகமாக வெளியிட்ட புகைப்படம்!

மேடம்.. ப்ளீஸ் மேடம்.. பெண் அம்பயரிடம் கெஞ்சிய அஸ்வின்! கோபமாக வெளியேறிய வீடியோ வைரல்! | TNPL 2025

சிஎஸ்கே, மும்பை போல் ஆர்சிபி இருந்திருந்தால் இந்த விபத்து ஏற்பட்டிருக்காது: கவாஸ்கர்

அடுத்த கட்டுரையில்
Show comments