Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உலகக்கோப்பை வரை அணியில் இதை செய்யவேக் கூடாது – கங்குலி அறிவுரை!

உலகக்கோப்பை வரை அணியில் இதை செய்யவேக் கூடாது – கங்குலி அறிவுரை!
, சனி, 28 ஜனவரி 2023 (16:11 IST)
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி பிசிசிஐ தலைவராகவும் சில ஆண்டுகள் பணியாற்றினார்.

இந்திய அணி உலகக்கோப்பைக்காக இப்போது விறுவிறுப்பாக தயாராகி வருகிறது. இதற்காக 20 பேர் கொண்ட ஒரு உத்தேச அணி உருவாக்கப்பட்டு, அந்த வீரர்களுக்குள்தான் உலகக்கோப்பை அணி இருக்கும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் உலகக்கோப்பை அணி குறித்து பேசியுள்ளார். அதில் “ இந்திய அணி மிகவும் திறமைமிக்க அணி. பல வீரர்களுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காமல் இருக்க, கடுமையான போட்டிதான் காரணம். இந்திய அணி மற்றும் தேர்வுக்குழுவினரிடம் நான் விரும்புவது ஒன்றுதான். உலகக்கோப்பை வரை இப்போது இருக்கும் அணியை மாற்றாமல் விளையாட வைக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தோல்விக்கான காரணம் என்ன? ஹர்திக் பேட்டி!