Publish Date: Tue, 22 Nov 2022 (15:47 IST)
Updated Date: Tue, 22 Nov 2022 (15:50 IST)
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்ததை அடுத்து அந்த அணி 19.4 ஓவர்களில் 10 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 4 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது. தற்போது ஹர்திக் பாண்ட்யா, தீபக் ஹூடா ஆகியோர் களத்தில் உள்ளனர்.
இந்நிலையில் 9 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 75 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் இழந்து விளையாடும் போது மழை குறுக்கிட்டு போட்டி நிறுத்தபட்டுள்ளது. இந்நிலையில் டி ஆர் எஸ் விதிப்படி 9 ஓவர்களில் 75 ரன்கள் சேர்க்க வேண்டும். இந்திய அணியும் 75 ரன்கள் சேர்த்துள்ளது.
இன்னும் ஒரு ரன் அதிகமாக அடித்திருந்தால், இந்திய அணிக்கு வெற்றிக் கிடைத்திருக்கும். இதனால் மழை விடாமல் போட்டிக் கைவிடப்பட்டால், போட்டி டை என்று அறிவிக்கப்படும்.
vinoth
Publish Date: Tue, 22 Nov 2022 (15:47 IST)
Updated Date: Tue, 22 Nov 2022 (15:50 IST)