Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மைதானத்தில் லேசான தூறல்: இந்தியா-நியூசிலாந்து போட்டி நடக்குமா?

Advertiesment
ind vs nz
, செவ்வாய், 22 நவம்பர் 2022 (11:40 IST)
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இன்று மூன்றாவது மற்றும் இறுதி டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற இருந்த நிலையில் மைதானத்தில் லேசான தூறல் விழுந்து கொண்டிருப்பதால் டாஸ் போடுவது ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன
 
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில் இரண்டாவது போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது
 
இந்த நிலையில் இந்திய நேரப்படி இன்று காலை 11:30 மணிக்கு மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி தொடங்க இருந்த நிலையில் திடீரென மைதானத்தில் லேசான சாரல் விழுந்தது
 
இதனை அடுத்து வருவது சில நிமிடங்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இன்று பெரிய அளவில் மழை இருக்காது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது இந்த போட்டியை நடைபெறும் என்றும் நடுவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாட ஆர்வமாக இருக்கிறேன்… ஜோ ரூட் தகவல்!