Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

8 விக்கெட்டுகளை இழந்து தத்தளிக்கும் வங்கதேசம்.. இந்தியா வெற்றி பெற வாய்ப்பா?

8 விக்கெட்டுகளை இழந்து தத்தளிக்கும் வங்கதேசம்.. இந்தியா வெற்றி பெற வாய்ப்பா?

Siva

, செவ்வாய், 1 அக்டோபர் 2024 (11:33 IST)
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கான்பூரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில், வங்கதேச அணி 8 விக்கெட்டுகளை இழந்து தத்தளிக்கும் நிலையில் இருப்பதால், இந்தியா வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 233 ரன்கள் எடுத்தது.

அதன்பின், இந்தியா டி20 போட்டியைப் போல அதிரடியாக விளையாடி 285 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது. இதையடுத்து, இரண்டாவது இன்னிங்ஸில், வங்கதேசம் தற்போது 8 விக்கெட்டுகளை இழந்து 118 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
 
இந்தியாவின் ஸ்கோரை விட 66 ரன்கள் மட்டுமே  வங்கதேசம் முன்னிலையில் உள்ளது. இன்னும் இரண்டு விக்கெட்டுகள் விரைவில் வீழ்த்தப்பட்டால், குறைந்த இலக்கை இந்தியா இன்று கடைசி நாளுக்குள் எடுத்து விடும் எனவும், இந்தியா வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது."



Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வங்கதேச வீரரை பாடி ஷேமிங் செய்தாரா ரிஷப் பண்ட்?... கிளம்பிய சர்ச்சை!