Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எல்லாரையும் அனுப்பிட்டேன்.. நானும் கிளம்புறேன்! – கேப்டனாய் கடமையை செய்த தோனி

Webdunia
வியாழன், 6 மே 2021 (11:03 IST)
ஐபிஎல் போட்டிகள் கொரோனா காரணமாக ரத்தான நிலையில் சிஎஸ்கே வீரர்களை பத்திரமாக அனுப்பி வைத்துவிட்டு இன்று புறப்படுகிறார் கேப்டன் தோனி.

நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வந்த நிலையில் ஐபிஎல் அணி வீரர்களுக்கு தொடர்ந்து கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் ஐபிஎல் போட்டிகள் எப்போது தொடங்கும் என அறிவிக்கப்படாத நிலையில் அனைத்து அணி வீரர்களும் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களையும் டெல்லியிலிருந்து சார்ட்டர் விமானம் மூலம் அனுப்பி வைத்து வருகின்றனர். இந்நிலையில் முதலாவதாக தனது அணி வீரர்கள் அனைவரும் தத்தமது ஊர்களுக்கு சென்றடையும் வரை தனது பயணத்தை தொடராமல் ஹோட்டலிலேயே தங்கியுள்ளார் கேப்டன் தோனி.

இன்று அனைத்து வீரர்களும் தங்களது ஊர்களுக்கு பத்திரமாக சென்றைடைந்த நிலையில் கேப்டன் தோனி இன்று சார்ட்டர் விமானம் மூலம் தனது சொந்த ஊரான ராஞ்சிக்கு புறப்பட உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ் வென்ற இங்கிலாந்து.. இந்திய அணியில் தமிழக வீரர்.. ஆடும் லெவனில் யார் யார்?

ரோஹித், கோலி இல்லாவிட்டாலும் வெற்றி எளிதாக இருக்காது… பென் ஸ்டோக்ஸ் கருத்து!

ஐபிஎல் வெல்வதை விட இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்வது முக்கியமானது- கேப்டன் கில்!

பெயர் மாறினாலும் பட்டோடிக்குக் கௌரவம்… இங்கிலாந்து தொடர் குறித்து சச்சின் கருத்து!

18 வருடங்களாக இங்கிலாந்து மண்ணில் இந்தியாவுக்கு வெற்றி இல்லை.. இதுவரை 3 கேப்டன்களுக்கு மற்றுமே வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments