Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் திரும்புவார்- மைக்கேல் கிளார்க் நம்பிக்கை!

Advertiesment
விராட் கோலி

vinoth

, சனி, 7 ஜூன் 2025 (08:54 IST)
இந்திய அணி இம்மாதம் 20 ஆம் தேதி இங்கிலாந்தில் நடைபெறும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த தொடருக்கான அணி அறிவிக்கப்படுவதற்கு ஒரு மாதத்துக்கு முன்பே ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளனர்.

கோலியின் ஓய்வு முடிவு ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. ஏனென்றால் கோலியால் இன்னும் நான்கு ஆண்டுகளாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி இருக்க முடியும். தற்போது டி 20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து கோலி ஓய்வு பெற்று விட்டதால் கோலி ஒருநாள் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்துகிறார். இதன் காரணமாக ஜூன் மாதம் இங்கிலாந்து செல்லும் இந்திய அணியில் கோலி இல்லாமல் இருப்பது இங்கிலாந்து ரசிகர்களுக்கே உவப்பானதாக அமையவில்லை.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கோலி பற்றி பேசும்போது “கோலி இல்லாதது டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஒரு பேரிழப்பு. அவர் டெஸ்ட் கிரிக்கெட்டை அந்த அளவுக்கு விரும்பினார். அவர் இல்லாமல் இந்திய அணி இங்கிலாந்தில் 0-5 என்ற கணக்கில் தோற்றால், இந்திய அணி நிர்வாகம் அவரை மீண்டும் அழைத்தால் அவர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கு மீண்டும் திரும்புவார் என்றுதான் நான் நினைக்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!