Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய பவுலர்களுக்கு தண்ணி காட்டும் லிட்டன் தாஸ்… 21 பந்துகளில் அரைசதம்!

Webdunia
புதன், 2 நவம்பர் 2022 (15:57 IST)
பங்க்ளாதேஷ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் லிட்டன் தாஸ் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்து வருகிறார்.

நடைபெற்று வரும் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் வங்கதேச அணி அதிரடியான தொடக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

முதலில் ஆடிய இந்திய அணி கே எல் ராகுல், கோலி ஆகியோரின் சிறப்பான அரைசதம்  மூலமாக 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 184 ரன்கள் சேர்த்துள்ளது. இதன் மூலம் பங்களாதேஷுக்கு இந்தியா ஒரு வலுவான இலக்கை நிர்ணயித்துள்ளது.

இதையடுத்து இப்போது பங்களாதேஷ் அணி விளையாடி வருகிறது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் லிட்டன் தாஸ் அதிரடியாக விளையாடி 21 பந்துகளில் அரைசதம் அடித்தார். இந்த உலகக்கோப்பை தொடரின் அதிவேகமாக அடிக்கப்பட்ட இரண்டாவது அரைசதம் இது வாகும்.

பங்களாதேஷ் அணி பவர்ப்ளே முடிவில் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 60 ரன்களை சேர்த்துள்ளது. லிட்டன் தாஸ் 24 பந்துகளில் 56 ரன்கள் சேர்த்து இந்திய அணிக்கு பயத்தைக் காட்டி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

டென்பின் பந்து வீச்சில் அபிஷேக்கை வீழ்த்தி பட்டத்தை வென்றார் கணேஷ்!

உங்களுக்காகதான் இம்பேக்ட் பிளேயர் விதி உருவாக்கப்பட்டுள்ளது… கெயிலை மீண்டும் ஐபிஎல் விளையாட அழைத்த கோலி!

RCB வீரர்கள் தோனியை அவமதித்தார்களா?... மைக்கேல் வாஹ்ன் சொன்ன கருத்து!

தோனி ஓய்வு பற்றி என்ன சொன்னார்? சி எஸ் கே CEO காசி விஸ்வநாதன் பகிர்ந்த தகவல்!

இதெல்லாம் ஒரு பொழப்பா.. ஸ்டார் ஸ்போர்ட்ஸை கழுவி ஊற்றிய கவுதம் கம்பீர்! – வைரலாக்கும் நெட்டிசன்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments