Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலி, ராகுல் அபார அரைசதம்… பங்களாதேஷுக்கு இந்திய நிர்ணயித்த இமாலய இலக்கு!

Webdunia
புதன், 2 நவம்பர் 2022 (15:28 IST)
இந்தியா மற்றும் பங்களாதேஷுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்களை இழந்து 184 ரன்கள் சேர்த்துள்ளது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்ததது. அதையடுத்து இந்திய அணி பேட்டிங் செய்த நிலையில் இந்த தொடரில் இதுவரை மோசமாக விளையாடிய கே எல் ராகுல் அரைசதம் அடித்து தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலளித்தார்.

அதன் பின்னர் கோலி சூர்யகுமார் யாதவ் இணை சிறப்பாக விளையாடியது. அதிரடியாக விளையாடிய சூர்யா 30 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் விளையாடிய கோலி, 44 பந்துகளில் 62 ரன்கள் சேர்த்தார்.

இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 184 ரன்கள் சேர்த்துள்ளது. இதன் மூலம் பங்களாதேஷுக்கு இந்தியா ஒரு வலுவான இலக்கை நிர்ணயித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லார்ட்ஸில் மட்டும்தான்.. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்… அடுத்த மூன்று சீசன்களூக்கு மாற்றமில்லை!

ஜிம்மில் ஏற்பட்ட காயம்… மீதமுள்ள போட்டிகளில் இருந்தும் விலகும் இந்திய வீரர்!

சாம்பியன்ஸ் லீக் தொடர் மீண்டும் தொடங்குவது எப்போது?..ஐசிசி கூட்டத்தில் ஆலோசனை!

டி 20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த ஜோஸ் பட்லர்!

கம்பீருக்கு ஆல்ரவுண்டர்கள் அதிக பாசம்… ஆனால் அணிக்குள் மூன்று பேர் எதற்கு?- அஜிங்யா ரஹானே கேள்வி!

அடுத்த கட்டுரையில்
Show comments