Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சங்ககராவும் ராஜஸ்தான் அணியில் இருந்து வெளியேறுகிறாரா?.. KKR – புதிய பொறுப்பு!

vinoth
ஞாயிறு, 17 ஆகஸ்ட் 2025 (06:49 IST)
ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கப்பட்ட போது முதல் சீசனில் கோப்பையை வென்ற அணி ராஜஸ்தான் ராயல்ஸ். ஆனால் அதன் பிறகு 17 ஆண்டுகளாக அந்த அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை. நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் மோசமான வெற்றிகளைப் பெற்று ப்ளே ஆஃப்க்குத் தகுதி பெறாத அணியாக பின்னடைவை சந்தித்தது ராஜஸ்தான் ராயல்ஸ்.

இந்நிலையில் அந்த அணிக் கேப்டனான சஞ்சு சாம்சனுக்கும் நிர்வாகத்துக்கும் கருத்து வேறுபாடு எழுந்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால் விரைவில் நடக்க இருக்கும் மினி ஏலத்துக்கு முன்பாக தன்னை வேறு அணிகளுக்கு டிரேட் செய்யவோ அல்லது ஏலத்தில் விட்டுவிடவோ சொல்லிக் கேட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் அந்த அணியின் இயக்குனராக இருக்கும் குமார் சங்ககராவும் தற்போது தனது பொறுப்பில் இருந்து விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் தலைமைப் பயிற்சியாளர் அல்லது ஆலோசகர் ஆகியவற்றில் ஒரு பொறுப்பில் இணைய வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. சஞ்சு சாம்சனையும் வாங்க கொல்க்த்தா அணி ஆர்வம் காட்டுவதாக தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் ஷர்மாவிடம் பேசி இன்னும் ஐந்து ஆண்டுகள் விளையாட வைக்கவேண்டும்- யோக்ராஜ் சிங் கருத்து!

பும்ரா விஷயத்தில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை… சக பந்துவீச்சாளர் ஆதரவு!

21 வயதில் கேப்டன் பொறுப்பு… சாதனை படைத்த ஜேக்கப் பெத்தெல்!

சிவப்புப் பந்தில் மட்டும் கவனம் செலுத்துங்க… பிசிசிஐ தரப்பிடம் இருந்து ஜெய்ஸ்வாலுக்கு சென்ற அறிவுரை!

இந்தியாவிற்கு வரும் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி: பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments