ரிஷப் பண்ட்டுக்கு நான் போட்டியா?... கே எல் ராகுல் அளித்த பதில்!

vinoth
ஞாயிறு, 2 மார்ச் 2025 (07:51 IST)
இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி லீக் போட்டி இன்று நடக்கிறது. இந்த போட்டியின் முடிவு சாம்பியன்ஸ் கோப்பைக்கான அரையிறுதி தேர்வில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்பதால் இந்த போட்டிக்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பு இல்லை.

இந்நிலையில் இன்றைய போட்டியில் ரோஹித் ஷர்மா , தசைப் பிடிப்புக் காரணமாக விளையாடாமல் போகும் பட்சத்தில் ரிஷப் பண்ட் அவருக்குப் பதில் களமிறக்கப்படலாம் என சொல்லப்படுகிறது. அணியில் கே எல் ராகுல் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இருப்பதால் ரிஷப் பண்ட்டுக்கு ஒரு நாள் அணியில் இடம் கிடைப்பதில்லை.

இந்நிலையில் ரிஷப் பண்ட் பற்றி பேசியுள்ள கே எல் ராகுல் “ரிஷப் பண்ட்டுக்கும் எனக்கும் இடையே எந்த போட்டியும் இல்லை. அவரைப் போல ஆடவும் நினைக்கவில்லை. அவருக்கு வாய்ப்புக் கிடைக்கும் போது அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்.” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூன்று ஃபார்மட்டுகளிலும் 100 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர்.. பும்ராவுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டி.. 102 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி..!

தென்னாப்பிரிக்கா அணிக்கு திரும்பும் டேவிட் மில்லர்.. இந்திய அணியில் சுப்மன் கில்- ஹர்திக்.. இன்று முதல் டி20 போட்டி..!

உணர்ச்சிகளை வெளிப்படுத்தினால் கிரிக்கெட் வீரர்களுக்கு மரியாதை கிடைக்காது: அஸ்வின்

ஐபிஎல் மினி ஏலம்: 350 வீரர்களுடன் இறுதிப் பட்டியல் வெளியீடு!

அடுத்த கட்டுரையில்
Show comments