ரிஷப் பண்ட்டுக்கு நான் போட்டியா?... கே எல் ராகுல் அளித்த பதில்!

vinoth
ஞாயிறு, 2 மார்ச் 2025 (07:51 IST)
இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி லீக் போட்டி இன்று நடக்கிறது. இந்த போட்டியின் முடிவு சாம்பியன்ஸ் கோப்பைக்கான அரையிறுதி தேர்வில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்பதால் இந்த போட்டிக்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பு இல்லை.

இந்நிலையில் இன்றைய போட்டியில் ரோஹித் ஷர்மா , தசைப் பிடிப்புக் காரணமாக விளையாடாமல் போகும் பட்சத்தில் ரிஷப் பண்ட் அவருக்குப் பதில் களமிறக்கப்படலாம் என சொல்லப்படுகிறது. அணியில் கே எல் ராகுல் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இருப்பதால் ரிஷப் பண்ட்டுக்கு ஒரு நாள் அணியில் இடம் கிடைப்பதில்லை.

இந்நிலையில் ரிஷப் பண்ட் பற்றி பேசியுள்ள கே எல் ராகுல் “ரிஷப் பண்ட்டுக்கும் எனக்கும் இடையே எந்த போட்டியும் இல்லை. அவரைப் போல ஆடவும் நினைக்கவில்லை. அவருக்கு வாய்ப்புக் கிடைக்கும் போது அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்.” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த 3 நிபந்தனைகளை ஒப்புக்கொண்டால் இந்தியாவுடன் விளையாடுவோம்: பாகிஸ்தான் கிரிக்கெட் கவுன்சில்

118 ரன்களுக்கு 7 விக்கெட் எடுத்து இந்தியாவுக்கு அதிர்ச்சி கொடுத்த அமெரிக்கா.. சூர்யகுமார் யாதவ் புண்ணியத்தில் வெற்றி..!

வைபவ் சூர்யவன்ஷி இந்திய சீனியர் அணியில் இடம்பெறாதது ஏன்? இந்த 2 காரணங்கள் தான்..!

15 பவுண்டரி.. 15 சிக்சர்ஸ்.. ருத்ரதாண்டவம் ஆடிய வைபவ் சூர்யவம்ஷி.. 300ஐ தாண்டிய ஸ்கோர்..!

மகளிர் ஐபிஎல்.. ஆர்சிபி மீண்டும் சாம்பியன்.. ஸ்மிருதி மந்தனாவுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments