Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூன்றாவது டெஸ்ட்டில் கே எல் ராகுலுக்கு ஓய்வா?.. இளம் வீரருக்கு வாய்ப்பு!

Webdunia
செவ்வாய், 21 பிப்ரவரி 2023 (15:20 IST)
ஆஸி அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து கே எல் ராகுல் நீக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரும் துணைக் கேப்டனுமான கே எல் ராகுக் மீது கடும் விமர்சனங்கள் எழும் அளவுக்கு அவரின் பார்ம் உள்ளது. கிட்டத்தட்ட 47 டெஸ்ட் போட்டிகள் விளையாடியுள்ள அவர் சராசரியாக 33 மட்டுமே வைத்துள்ளார்.

இந்திய தொடக்க ஆட்டக்காரர்களில் இந்தளவுக்குக் குறைவான சராசரி யாருக்கும் இல்லை. இந்நிலையில் முன்னாள் வீரர்கள் சுப்மன் கில் போன்ற திறமையான வீரர்கள் இருக்கும் நிலையில் கே எல் ராகுலுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் அளிப்பது ஏற்புடையதில்லை எனக் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் கடும் விமர்சனங்கள் எழுந்ததை அடுத்து மூன்றாம் டெஸ்ட்டில் இருந்து கே எல் ராகுல் நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக இளம் வீரர் சுப்மன் கில் சேர்க்கப்படலாம் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments