Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே க்ரவுண்டுல விளையாடினா மட்டும் பத்தாது.. திறமையும் இருக்கணும்! - இந்திய அணி குறித்து ஸ்டீவ் ஸ்மித்!

Prasanth Karthick
வியாழன், 6 மார்ச் 2025 (12:12 IST)

சாம்பியன்ஸா ட்ராபி தொடரில் இந்தியா வென்றதற்கு ஒரே மைதானத்தில் விளையாடுவதே காரணம் என்ற குற்றச்சாட்டு உள்ள நிலையில் அதுகுறித்து ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் கருத்து தெரிவித்துள்ளார்.

 

இந்த ஆண்டு சாம்பியன்ஸ் ட்ராபி போட்டிகளை பாகிஸ்தான் நடத்தும் நிலையில், இந்தியாவின் போட்டிகள் மட்டும் துபாய் மைதானத்தில் நடைபெறுகின்றன. இந்நிலையில் இந்திய அணி அரையிறுதி உட்பட அனைத்து போட்டிகளிலும் வென்று இறுதி போட்டிக்கு சென்றுளது. ஆனால் இந்திய அணியின் இந்த தொடர் வெற்றிகளுக்கு, அது ஒரே மைதானத்தில் தொடர்ந்து விளையாடுவதே காரணம் என ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் உள்ளிட்ட பலர் கூறி வருகின்றனர்.

 

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள திடீரென ஓய்வு அறிவித்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் “ஒரே மைதானத்தில் விளையாடுவதால் மட்டும் இந்திய அணியால் வெற்றிபெற்று விட முடியாது. இந்திய அணி எங்களுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி எங்களை வெளியேற்றியது. அந்த அணியினர் திறமையாக விளையாடி வருகிறார்கள்” எனக் கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

The making of Ravichandra ashwin... அஸ்வினின் கிரிக்கெட் வாழ்க்கையை ஆவணப்படமாக எடுத்த சிஎஸ்கே.. டிரைலர் ரிலீஸ்!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி… ரவி சாஸ்த்ரி கணித்த ப்ளேயிங் லெவன்!

நான் ஏன் டெஸ்ட் கேப்டன்சியை ஏற்கவில்லை?… பும்ரா பதில்!

ஐபிஎல் பெனால்டி புகழ் திக்வேஷ் ரதி ஐந்து பந்துகளில் ஐந்து விக்கெட் எடுத்துக் கலக்கல்!

தாய் உடல்நிலைக்காக இந்திய திரும்பிய கம்பீர்… இன்று இங்கிலாந்து திரும்புகிறாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments