Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பந்தில் எச்சிலைத் தடவ அனுமதிக்க வேண்டும்… ஐசிசிக்கு முகமது ஷமி கோரிக்கை!

Advertiesment
பந்தில் எச்சிலைத் தடவ அனுமதிக்க வேண்டும்… ஐசிசிக்கு முகமது ஷமி கோரிக்கை!
, வியாழன், 6 மார்ச் 2025 (09:58 IST)
கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கும் மேலாக முழங்கால் காயத்தினால் அவதிப்பட்டு வந்த ஷமி சமீபத்தில் இந்திய அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டார். இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் சிறப்பாக பங்களிப்பு செய்த அவர் சாம்பியன்ஸ் கோப்பை தொடரின்  முதல் போட்டியிலேயே பங்களாதேஷ் அணிக்கு எதிராக 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 200 விக்கெட்களை வீழ்த்திய இந்திய பவுலர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். பும்ரா இல்லாத நிலையில் இந்திய அணியின் பவுலிங் யூனிட்டை அவர் வழிநடத்தி வருகிறார். இந்நிலையில் அவர் ஐசிசிக்கு ஒரு கோரிக்கையை வைத்துள்ளார்.

அதில் “பந்தில் எச்சில் தடவ அனுமதி இல்லாததால் பவுலர்களால் ரிவர்ஸ் ஸ்விங்க் செய்ய முடியவில்லை. ஐசிசி அதற்கு அனுமதி அளித்தால் கண்டிப்பாக போட்டி விறுவிறுப்பானதாக மாறும்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தென்னாப்பிரிக்காவை வென்று இறுதிப் போட்டிக்கு சென்ற நியுசிலாந்து!