Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சுமாராக ஆடிய இந்தியா: குறுக்கே புகுந்த மழை!

சுமாராக ஆடிய இந்தியா: குறுக்கே புகுந்த மழை!
, வெள்ளி, 21 பிப்ரவரி 2020 (10:37 IST)
நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதியில் முடிந்தது.

இந்தியா – நியூஸிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் தொடர் தொடங்கி நடந்து வருகிறது. டாஸ் வென்ற நியூஸிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. பேட்டிங்கில் களம் இறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்க்ஸ் முடிந்துள்ள நிலையில் சுமாரான ஆட்டத்தையே கொடுத்திருக்கிறது.

தொடக்க ஆட்டக்காரர்களான ப்ரித்வி ஷா 16 ரன்களிலும், மயங்க் அகர்வால் 34 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் விராட் கோலியின் ஆட்டத்தை தீவிரமாக எதிர்பார்த்த நிலையில் அவரும் 2 ரன்களில் அவுட் ஆனது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. கடந்த சில ஆட்டங்களில் கோலி சுமாரான ஆட்டத்தையே தருவதாக ரசிகர்கள் குறைப்பட்டுக் கொண்டுள்ளனர்.

முதல் இன்னிங்ஸ் முடிவில் 55 ஓவர்களுக்கு 5 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்களை பெற்றுள்ளது இந்தியா. இந்நிலையில் மழை பெய்ய தொடங்கியதால் ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. முதல் இன்னிங்ஸ் முடிந்த நிலையில் அடுத்ததாக நியூஸிலாந்து பேட்டிங் செய்ய இருக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: முதல் போட்டியில் இந்தியா vs ஆஸ்திரேலியா