Publish Date: Fri, 14 Jan 2022 (11:05 IST)
Updated Date: Fri, 14 Jan 2022 (11:06 IST)
இந்திய அணி தனது இரண்டு இன்னிங்ஸிலும் அனைத்து விக்கெட்களையும் கேட்ச் மூலமாகவே இழந்துள்ளது.
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நடந்து வருகிறது. நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவின் கையே ஓங்கி இருந்தது. இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 198 ரன்கள் சேர்த்தது. இதனால் தென் ஆப்பிரிக்க அணிக்கு வெற்றி இலக்காக 212 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த போட்டியில் இதுவரை 145 ஆண்டுகால டெஸ்ட் வரலாற்றில் இல்லாத அளவுக்கு இந்திய அணியின் 20 விக்கெட்களும் கேட்ச் மூலமாகவே அவுட் ஆகினர். ஒரு அணி 20 விக்கெட்களையும் கேட்ச் கொடுத்து அவுட் ஆவது 145 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவே முதல் முறையாகும்.