Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஐந்தாவது ஆஷஸ் டெஸ்ட்… டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங்!

Advertiesment
ஆஷஸ்
, வெள்ளி, 14 ஜனவரி 2022 (10:30 IST)
ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் ஆஷஸ் தொடரின் ஐந்தாவது போட்டி இன்று தொடங்கியுள்ளது.

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் பாரம்பரியம் மிக்க ஆஷஸ் தொடர் இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதுவரை நடந்த 4 போட்டிகளில்  மூன்றை வென்ற ஆஸ்திரேலியா 3-1 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது.

இதையடுத்து ஐந்தாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி இன்று ஹோபர்ட்டில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பந்துவீச முடிவு செய்துள்ளார். இந்த ஒரு டெஸ்ட்டையாவது வெற்றி பெற்று ரசிகர்களுக்கு ஆறுதல் அளிக்கவேண்டும் என்பதில் இங்கிலாந்து அணி ஆர்வமாக இருக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இலக்கை நெருங்கியது தென்னாப்பிரிக்கா: இந்தியாவுக்கு மீண்டும் ஒரு தோல்வியா?