இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்து வரும் இங்கிலாந்து இங்கிலாந்து அணி முதல் நாளில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. முதல் நாள் முடிவில் நான்கு விக்கெட்களை இழந்து 251 ரன்கள் சேர்த்துள்ளது. அந்த அணியின் ஜோ ரூட் சிறப்பாக விளையாடி 99 ரன்களோடு ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார். அவரோடு கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 39 ரன்களோடு களத்தில் உள்ளார்.
இந்த போட்டியில் இந்திய அணி டாஸைத் தோற்றது. இதன் மூலம் சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து 13 முறை டாஸ் தோற்ற அணி என்ற மோசமான சாதனையைப் படைத்துள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜனவரி மாதத்தில் இருந்து இந்திய அணி அனைத்து சர்வதேச போட்டிகளிலும் டாஸைத் தோற்றுள்ளது.
இதற்கு முன்னர் வெஸ்ட் இண்டீஸ் அணி 12 முறையும், இங்கிலாந்து அணி தொடர்ந்து 11 முறையும் டாஸைத் தோற்றிருந்தன. இப்போது அந்த சாதனையை இந்திய அணி முறியடித்துள்ளது.