Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

RCB அணியில் ஆட விரும்புகிறேன் – பாகிஸ்தான் வீரர் ஓபன் டாக்!

Advertiesment
ஆர் சி பி

vinoth

, சனி, 8 மார்ச் 2025 (14:37 IST)
எவ்வளவோ திறமையான வீரர்கள் ஆர் சி பி அணிக்குள் வந்தும், கோலி போன்றவர்கள் திறமையாக அணியை வழிநடத்தியும், இன்னும் ஒருமுறை கூட அந்த அணிக் கோப்பையை வெல்லவில்லை. சில முறை பைனல் வரை சென்றும், அதிக முறை ப்ளே ஆஃப் வரை சென்றும் இன்னும் ஆர் சி பி யால் கோப்பையை வெல்ல முடியவில்லை.

ஆனாலும் அந்த அணிக்கு சென்னை, மும்பை போன்ற பல முறைக் கோப்பை வென்ற அணிகளுக்கு நிகரான ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்நிலையில் இந்த சீசனுக்கு புதிய கேப்டன் அந்த அணிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். விராட் கோலி மீண்டும் கேப்டனாக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரஜத் படிதார் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதனால் இந்த ஆண்டாவது அந்த அணிக் கோப்பையை வெல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆமீர் ஐபிஎல் தொடர் பற்றி பேசிய ஒரு கலந்துரையாடலில் “நான் ஆர் சி பி அணியில் இணைந்து விளையாட விரும்புகிறேன். எனக்கு மிகவும் பிடித்த ஐபிஎல் அணி என்றால் அது பெங்களூர் அணிதான்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐபிஎல் தொடரிலாவது விளையாடுவாரா பும்ரா?... ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல்!